பத்திரமாக இஸ்தான்புல் சேர்ந்த கெளதம் மேனன்

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (12:26 IST)
துருக்கி எல்லையில் சிக்கிக் கொண்ட கெளதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர், பத்திரமாக இஸ்தான்புல் சென்று சேர்ந்தனர்.

 
 
விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ளார் கெளதம் மேனன். ஜார்ஜியாவில் இருந்து இஸ்தான்புலுக்கு சாலை வழியாகச் சென்றபோது, துருக்கி நாட்டு எல்லையில் சிக்கிக் கொண்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உதவி கேட்க முடியாமல் 24 மணி நேரத்துக்கும்  அதிகமாகத் தவித்து வந்தனர்.
 
எனவே, உதவி கேட்டு நேற்று காலை கெளதம் மேனன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் கெளதம் மேனன். படப்பிடிப்பு  சாதனங்களுக்கான அனுமதி கடிதத்தில் ஏதோ குளறுபடி என்கிறார்கள். ஆனால், நேற்று மதியமே எல்லை பாதுகாப்புப்  படையினர் வந்து அவர்கள் செல்ல அனுமதி அளித்துவிட்டார்களாம். அவர்களும் இஸ்தான்புல் சென்று சேர்ந்துவிட்டனர். இந்த  மாத இறுதிவரை அங்கு ஷூட்டிங் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

அடுத்த கட்டுரையில்
Show comments