Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பொய் சொல்லி விஜய்யை கடுப்பேற்றும் எஸ் ஏ சி!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (16:29 IST)
நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தன் பெயரிலேயே கட்சி ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது.

அதை தொடர்ந்து விஜய்யின் எதிர்ப்பால் அந்த கட்சியை கலைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்நிலையில் தற்போது எஸ்.ஏ.சி தனது பெயரிலேயே அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக எஸ் ஏ சி அளித்த நேர்காணல் ஒன்றில் ’விஜய்யை சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழாவின் போது சந்தித்தேன். அவர் எனக்கு மோதிரம் பரிசளித்தார். ‘எனக் கூறினார்.

இதனால் விஜய்க்கும் எஸ் ஏ சிக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் எஸ் ஏ சி சொன்னது போல அவர் விஜய்யை சந்திக்கவே இல்லையாம். ஏனென்றால் அப்போது விஜய் சென்னையிலேயே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ரசிகர்களின் ஓட்டுகளை வாங்க எஸ் ஏ சி அள்ளிப் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments