வாழ்க பாரதம் என்று சொல்வதில் எங்களுக்கும் பெருமிதமே… ஒளிப்பதிவு திருத்த சட்டம் குறித்து எஸ் ஆர் பிரபு!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (11:39 IST)
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவுக்கு சினிமாக்காரர்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

ஒன்றிய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021 என்பதைக் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் ஒன்றிய அரசு நினைத்தால் சென்சார் செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தைக் கூட மறுபடியும் சென்ஸார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சினிமாத்துறையினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து  வெற்றிமாறன், கமல்ஹாசன், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் சூர்யாவின் சகோதரரும் தயாரிப்பாளருமான எஸ் ஆர் பிரபு தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா நாட்டின் இறையாமை காக்கவே என ஒரு கூட்டம் கம்புசுத்துகிறது. இவ்வாறான விசயம் முன்பே இருந்திருந்தால் #அருவி #ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை! ஆகவேதான் நாங்கள் அதை எதிர்க்கிறோம். மற்றபடி வாழ்க பாரதம் என முழங்குவதில் எங்களுக்கும் பெருமிதமே!!’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments