தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.
அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு டாக்டர் மற்றும் விஜய்யோடு பீஸ்ட் மற்றும் ரஜினியோடு ஜெயிலர் என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. இப்போது ஜெயிலர் 2 பட வேலைகளில் இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
ரஜினிகாந்த் கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்ததும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவை நடிக்க வைக்க இயக்குனர் நெல்சன் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடித்துக் கலக்கி வரும் எஸ் ஜே சூர்யா ரஜினியோடு மோதினால் திரைக் கண்டிப்பாக தீப்பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.