Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொகுசு கார் வழக்கு: விஜய் அபாரதத்திற்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

சொகுசு கார் வழக்கு:  விஜய் அபாரதத்திற்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்!
, செவ்வாய், 27 ஜூலை 2021 (12:52 IST)
சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்த அபாரதத்திற்கு இடைக்கால தடை!

தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் வரியில் தளர்வு அளிக்க கோரி நடிகர் விஜய் அப்போது மனு அளித்திருந்தார்.
 
மனு அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மனு மீதான விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதித்தது. இந்த அபராதத்தை முதல்வர் கோவிட் பொது நிவாரண நிதியில் இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தற்போது சில நிபந்தனை விதித்துள்ள விஜய் தரப்பு, என் காருக்கு வரி கட்ட தயார். ஆனால், தனி நீதிபதி கருத்துகளை நீக்க வேண்டும். அவர் விதித்த அபராத தொகை 1 லட்சத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நீதிபதி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அதன் மூலம் என்னை தேச விரோதி போல சித்தரித்து உள்ளார் என நடிகர் விஜய் தரப்பு மேல்முறையீட்டுசெய்தது. நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாஷிகாவின் நிலைமை தாய் உருக்கமான பேட்டி!