Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்ஸரில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங்!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (12:26 IST)
தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய், குத்து சண்டை வீரராக  பாக்ஸர் என்ற படத்தில் நடிக்கிறார். பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக், இயக்குகிறார்.


 
இந்தப் படத்தில் நடிப்பதற்காக மலேசியா மற்றும் வியட்நாமில்  அருண் விஜய் குத்து சண்டை பயிற்சி பெற்று வருகிறார். இந்த படத்தின் சண்டைப் பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன், அருண் விஜய்க்குப் பயிற்சி அளிக்கிறார். வரும்  மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். லண்டனைச் சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன், ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் தேசிய விருது வென்ற ரித்திகா சிங் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
ரியல் குத்து சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா  சிங் ஏற்கனவே இறுதி சுற்று என்ற குத்து சண்டை தொடர்பான படத்தில் நடித்திருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

ஒரே நாளில் ரிலீஸாகும் அனுஷ்கா & ராஷ்மிகா படங்கள்!

ராகு காலத்தில்தான் எனக்குப் பேருவச்சாங்க… நான் என்ன உருப்படலயா? – சுந்தர்ராஜனின் லாஜிக் கேள்வி!

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments