Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'மீ டு' இயக்கம் குறித்து ராதாரவி காட்டமாக விமர்சனம் !

'மீ டு' இயக்கம் குறித்து ராதாரவி காட்டமாக விமர்சனம் !
, செவ்வாய், 23 அக்டோபர் 2018 (14:40 IST)
புகைப்படக் கலைஞர் பிரித்திகா மேனன் நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் மீது#Metoo இயக்கத்தின் கீழ் பகீர் புகார் எழுப்பினார், பொன்னர் - சங்கர் படத்தில்பணியாற்றிய போது, தியாகராஜன் எனது ரூமை நள்ளிரவில் தட்டி உள்ளே நுழைய முயன்றார் என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளிப்பதற்காக சென்னை பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் தியாகராஜன்நேற்று சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் தியாகராஜனுக்கு ஆதரவாக நடிகர் ராதாரவியும் கலந்து கொண்டார், அப்போது ராதாரவி பேசுகையில்,   " மீ டூ இயக்கம் அமெரிக்காவுல நிறவெறிக்கு எதிராக ஒரு கருப்பினப்பெண் ஆரம்பிச்சாங்க. இந்த மீடூ இயக்கத்தோட நோக்கமே புரியாக இங்க பல பேர், திரைத்துறையில இருக்குறவங்க மேலகுற்றம்சாட்டுறாங்க. 
 
பத்திரிகையாளர்களை கெஞ்சி கேட்குறேன். எது உண்மையோ அதைமட்டும் பேசுங்க. நம்ம எல்லோரும் ஒண்ணு இல்லையா. யாராவது புகார் கொடுத்தால்அதைப் பற்றி விசாரித்து பதிவு செய்யுங்கள். சின்மயி நல்ல குழந்தைதான். ஆனாஅவங்கள யாரோ தூண்டிவிட்டுட்டாங்க போல. அதான் அந்தக் குழந்தை அப்படி பேசுது.எங்க டப்பிங் யூனியன்லகூட அந்தப் பொண்ணு மெம்பரா இருக்கு. அந்தப் பொண்ணு இப்போபாடுறது விட்டுட்டு பேசுறதுக்கு ஆரம்பிச்சிருச்சு போல. தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக மீ டூ இருக்கும்.
 
ராதாரவி கெட்ட வார்த்தை பேசுறானு சொல்றாங்க.. ஒருபடம் முழுக்க (வடசென்னை)கெட்ட வார்த்தை பேசியிருக்காங்க.
 
தியாகராஜன், அர்ஜுன் பல வருஷமாக சினிமாவுல இருக்காங்க, இந்த மாதிரி  செய்தியால அவங்க குடும்பத்துல இருக்குறவங்க மனசு ரொம்பவே புண்படும்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயங்கர விபத்தை ஏற்படுத்திய பிரபல நடிகரின் தந்தை: குழந்தை உள்பட 3 பேர் உயிருக்கு போராட்டம்