Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியின் அடுத்த படத்தில் இணைந்த ’பொன்னியின் செல்வன்’ கலைஞர்… லேட்டஸ்ட் தகவல்

கார்த்தியின் அடுத்த படத்தில் இணைந்த ’பொன்னியின் செல்வன்’ கலைஞர்… லேட்டஸ்ட் தகவல்
, புதன், 11 மே 2022 (10:46 IST)
கார்த்தி நடிப்பில் அடுத்து ராஜுமுருகன் இயக்கும் திரைப்படத்துக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இப்போது ராஜு முருகன் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியை வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் கார்த்தி நடிப்பில் உருவான மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் சமீபத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதையடுத்து இரண்டாவது முறையாக கார்த்தி படத்தில் இணைந்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியின் படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?... வெளியான சூப்பர் தகவல்!