2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
திங்கள், 9 ஜூன் 2025 (14:15 IST)
சமீபத்தில் நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "ரவி மோகன் ஸ்டுடியோ" என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தின் லோகோ சமீபத்தில் வெளியான நிலையில், அந்த நிறுவனத்தின் முதல் திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
 
இந்த புதிய படத்தில் ரவி மோகனுடன் நடிகர் எஸ்.ஏ. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குவது கார்த்திக் யோகி, இவர் முன்னதாக 'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கியவர்.
 
படத்திற்கு "ப்ரோ கோடு" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கனவே 'அனிமல்', 'அர்ஜுன் ரெட்டி' போன்ற பிரபல திரைப்படங்களுக்கு இசை வழங்கியுள்ளார்.
 
இதில் இருவரும் ஹீரோக்கள் மட்டுமன்றி, நான்கு நாயகிகள் நடித்திருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அதோடு, இரண்டு பான்-இந்தியா நடிகர்கள் வில்லனாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. ஒளிப்பதிவாளராக கலைச்செல்வம், எடிட்டராக பிரதீப் ராகவ் பணியாற்றவுள்ளனர்.
 
இயக்குனர் கார்த்திக் யோகி, இந்தப் பட அறிவிப்பை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுபமா பரமேஸ்வரன் மார்பிங் படங்கள்: இணையவழி துன்புறுத்தலில் ஈடுபட்ட 20 வயது இளம்பெண்!

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா திருமணம்… எப்போது தெரியுமா?

கமல் & அஜித் கூட்டணியில் ஒரு படம்… லோகேஷ் கனகராஜ் திட்டம்!

அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘ரெட்ட தல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முதல் படத்தில் அந்தக் காரணத்துக்காக அழுதேன்… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments