Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இராவணக் கோட்டம் படப்பிடிப்பு நிறைவு…. சாந்தனுவின் கடைசி நம்பிக்கை!

Advertiesment
இராவணக் கோட்டம் படப்பிடிப்பு நிறைவு…. சாந்தனுவின் கடைசி நம்பிக்கை!
, சனி, 18 செப்டம்பர் 2021 (10:38 IST)
கதிர், ஓவியா நடிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய 'மதயானைக்கூட்டம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மதயானைக் கூட்டம் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் கழிந்த  நிலையில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார். 

சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் சாந்தனுவால் இன்னும் ஒரு பேர்சொல்லும் வெற்றியைப் பெற முடியவில்லை. இந்நிலையில் இந்த படத்தை பெரிதும் நம்பி அவர் கடின உழைப்பை செலுத்தி இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் விக்ரம் சுகுமாறன் முடித்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா & சுதா கொங்கரா கூட்டணி… கிளப்பி விட்டது யாருப்பா!