Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சினிமாவை விட்டு விலகவேண்டுமா? – ட்ரோல்களால் மனம் உடைந்த ராஷ்மிகா!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:13 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவரை பற்றி அதிகமாக பரவும் ட்ரோல்கள் மற்றும் எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசியுள்ள அவர் “நான் சினிமாவை விட்டு விலகிவிட வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்களுக்கு என்னோடு என்னதான் பிரச்சனை என்று சொல்லிவிடுங்கள். நான் உடல்பயிற்சி செய்தால் ஆண் போல இருப்பதாக சொல்கிறீர்கள். இல்லையென்றால் குண்டாக இருப்பதாக சொல்கிறீர்கள். அமைதியாக இருந்தால் திமிர் என்கிறீர்கள். உங்கள் வார்த்தைகள் என்னை மனதளவில் பாதிக்கின்றன ” என ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி இடம் அறிவிப்பு.. ரஜினி ரசிகர்கள் குஷி..!

குக் வித் கோமாளியில் என்ன நடந்தது! பிரியங்கா vs மணிமேகலை சண்டை! - வெளியானது ஆடியோ!

கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் மனசிலாயோ பாடலுக்கு செம்ம ஸ்டெப் போட்ட ரஜினி & கோ!

கொட்டுக்காளி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

நம்முடைய கஷ்டங்களை ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை… சசிகுமார் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments