Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையை மறைத்தாரா அல்லது உண்மையே தெரியாதா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா…!

vinoth
செவ்வாய், 8 ஜூலை 2025 (14:02 IST)
கன்னட சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா தற்போது பேன் இந்தியா நடிகையாக அறியப்படுகிறார். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் உள்ளிட்ட படங்கள் பெருவெற்றி பெற்றன.

சமீபகாலமாக ராஷ்மிகா எந்தவொரு கன்னட படத்திலும் நடிக்கவில்லை. இதனால் அவர் கன்னட திரையுலகில் பலத்த எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். ஆனாலும் அவரின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருப்பதால் அவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் ‘நான் சார்ந்த கொடவா சமூகப் பின்னணியில் இருந்து யாரும் சினிமாவுக்குப் பெரிதாக வந்ததில்லை. அந்த சமூகத்தில் இருந்து வந்த முதல் பெண் நடிகை நான்தான்” எனத் தெரிவித்தார். ஆனால் கன்னட சினிமாவில் கொடவா சமூகத்தில் இருந்த பல நடிகைகள் வந்து நடித்துள்ளனர். ஆனால் அதை மறைத்து ராஷ்மிகா இப்படி பேசியதாக அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழ்க்கை என்னவென்று உணரவிரும்பினல்… இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!

ரஜினியின் அடுத்த படம் யாருடன்… இறுதிப் பட்டியலில் இரண்டு இயக்குனர்கள்!

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க துருவ் விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை!

பவன் கல்யாண் படத்தால் நடந்த மாற்றம்… விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments