தனது திரை பயணத்தை டான்ஸ் மாஸ்டராக துவங்கி, நடிகராக, சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார். அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும் பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும் லாரன்ஸ் வெறித்தனமாக நடித்து உள்ளார்.
இதையடுத்து அவர் காஞ்சனா 4 படத்தை பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகளாக இந்த படம் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இடையில் பிற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் லாரன்ஸ். சமீபத்தில் பொள்ளாச்சியில் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்றது.
ஏற்கனவே இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனாவும் படத்தில் இணைந்துள்ளார். வழக்கமாக காஞ்சனா வரிசை படங்களில் பேய் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக இடம்பெறும். இந்நிலையில் இந்த படத்தில் ராஷ்மிகா பேயாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.