Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனிமல் திரைப்படம் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது… ரன்பீர் கபூர் பதில்!

அனிமல் திரைப்படம் ஒரு  விவாதத்தை உருவாக்கியுள்ளது… ரன்பீர் கபூர் பதில்!

vinoth

, திங்கள், 29 ஜனவரி 2024 (13:52 IST)
இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  இயக்கிய அனிமல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது.  இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆணாதிக்கத்தை தன் படங்களில் பெருமையான விஷயமாக காட்டுகிறார் எனக் கூறி அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் நான் விமர்சனங்களைக் கண்டுகொள்வது கிடையாது என சந்தீப் கூறியுள்ளார்.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர் “அனிமல் திரைப்படம் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கம் பற்றிய ஒரு ஆரோக்யமான விவாதத்தை உருவாக்கியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான விஷயம். சினிமா என்பது குறைந்தபட்சம் ஒரு உரையாடலையாவது உருவாக்க வேண்டும். ஒரு தவறு நடக்கும்போது நாம் அதை சுற்றிக் காட்டாவிட்டால் நம்மால் அது தவறு என்பதையே உணர முடியாது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவுண்டமணி பேசிய பன்ச் வசனங்களை வைத்தே ஒரு பாடல்… ஒத்த ஓட்டு முத்தையா பட அப்டேட்!