Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய சினிமாவின் தலைநகரமாக ஐதராபாத்தை மாற்ற பாடுபடுவேன் – தெலுங்கு நடிகர் கருத்து!

இந்திய சினிமாவின் தலைநகரமாக ஐதராபாத்தை மாற்ற பாடுபடுவேன் – தெலுங்கு நடிகர் கருத்து!
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:50 IST)
இந்திய சினிமாவின் தலைநகராக ஐதராபாத்தை மாற்ற பாடுபடுவேன் என ராணா தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக சென்னை இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில்தான் நடந்தன.  மற்ற மொழி நடிகர்கள் சென்னையிலேயே பெரும்பாலும் தங்கி இருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வழக்கம் மாறி அவரவர் மாநிலங்களில் படப்பிடிப்பை நடத்த ஆரம்பித்தனர்.

அந்த வழக்கமும் இப்போது மாறி வருகிறது. அனைத்து மொழியினரும் இப்பொது படப்பிடிப்புக்காக ஐதராபாத்துக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ் சினிமாவில் அஜித், ரஜினி ஆகியோரின் படங்கள் தொடர்ந்து ஐதராபாத்தின் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில்தான் நடக்கின்றன. கிட்டத்தட்ட இன்று தென்னிந்திய சினிமாவின் தலைநகராக ஐதராபாத்தான் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ள நடிகர் ராணா டகுபதி ‘ஐதராபாத்தை இந்திய சினிமாவின் தலைநகராக மாற்ற பாடுபடுவேன் ‘ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டான் படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!