Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது இராமாயணம் முதல் பாக ஷூட்டிங்! படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ரன்பீர்!

vinoth
புதன், 2 ஜூலை 2025 (08:05 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.  இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் ரன்பீர் கபூர் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையடுத்து யாஷ் சம்மந்தமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவில் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரன்பீர். முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னால் அவர் இல்லாமல் படம் எடுக்க முடியாது…. லோகேஷ் பகிர்ந்த தகவல்!

ரசிகர்களுக்காக என்னால் கதை எழுத முடியாது! - லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்!

இனி திரைப்படங்கள் தயாரிக்கப் போவதில்லை என இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் ரீசண்ட் புகைப்படத் தொகுப்பு!

ஹோம்லி லுக்கில் க்யூட்டாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments