Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவமனையில் உள்ள பச்சன்களை விசாரித்த ரஜினி!

Advertiesment
நடிகர் ரஜினிகாந்த்
, ஞாயிறு, 12 ஜூலை 2020 (10:34 IST)
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டதாக தகவல்.  
 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாக நேற்று இரவு தகவல்கள் வெளிவந்தன. இதனை அவர் தனது டுவிட்டரில் உறுதி செய்திருந்தார். 
 
மேலும் அமிதாப்பை அடுத்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதனைத்தொடர்ந்து அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பேத்தி ஆராதனா ஆகியோர்களின் கொரோனா முடிவு வெளியாகியுள்ளது. மூவருக்குமே நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. 
 
இந்நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் மிகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமனாருடன் சேர்ந்து சமந்தா செய்த உருப்படியான வேலை!