Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியை தற்கொலைக்கு தள்ளியிருப்பார்கள் - சீமான்

Advertiesment
ரஜினியை தற்கொலைக்கு தள்ளியிருப்பார்கள் - சீமான்
, சனி, 23 ஜனவரி 2021 (15:59 IST)
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் தற்கொலைக்கே தள்ளியிருப்பார் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நல குறைவால் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகினார் ரஜினிகாந்த். அவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலர் வேறு சில கட்சிகளில் இணைய தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டாலின் உள்ளிட்ட சில ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மக்கள் மன்ற தலைமை நிர்வாகி சுதாகர் “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்களுக்கு விருப்பமான எந்த கட்சியிலும் இணையலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பது எப்போதும் மாறாதது” என தெரிவித்திருந்தார்.

இதனால் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்திருந்தவர்களும் ரஜினி ரசிகர்களும் ரஜினி அரசியல் கட்சி தொடங்காததால் ஏமாற்றத்தில் இருந்தாலும்கூட சுதாகர் கூறிய கருத்தை பலரும் ஆமோதித்தனர்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது சென்னை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஆனால் அவரைக் குறித்தும் அவரது அரசியல் வருகைகுறித்தும்  பலரும் விமர்சித்து வருகின்றனர்.
webdunia

இந்நிலையில் ரஜினியைக் குறித்து சீமான் கூறியுள்ளதாவது :

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் அவரைத் தற்கொலை முடிவுக்கு தள்ளியிருப்பார்கள் என்றும் கிராமங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்படாமல் நாட்டில் வளர்ச்சி ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்பாஹ் என்ன Shape'டா யப்பா... மூச்சு முட்ட வைக்கும் கேத்ரின் தெரசா!