Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“தளபதி படத்துல என் நடிப்பு மணிரத்னத்துக்குப் பிடிக்கவில்லை…” ரஜினி ஓபன் டாக்!

“தளபதி படத்துல என் நடிப்பு மணிரத்னத்துக்குப் பிடிக்கவில்லை…” ரஜினி ஓபன் டாக்!
, புதன், 7 செப்டம்பர் 2022 (14:22 IST)
தளபதி படத்தில் நடிக்கும் போது தன் நடிப்பு இயக்குனர் மணிரத்னத்துக்குப் பிடிக்கவில்லை என்று ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் மேடையில் பேசியுள்ளார்.

மறைந்த எழுத்தாளர் கல்கி 1950 களில் எழுதிய பிரபல வெகுஜன நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து நேற்று படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் ஆனது. விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர். மேடையில் ரஜினி, கமல் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் ஒன்றாக தோன்றி பேசினர்.

அப்போது பேசிய ரஜினிகாந்த் “நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தளபதி படத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்தேன். அப்போது என்னுடைய நடிப்பு அவருக்கு பிடிக்கவில்லை. நான் கமலுடன் ஆலோசித்து அவருக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்தேன்” எனக் கூறியுள்ளார். ரஜினியின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்த படம் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'நானே வருவேன்’ சிங்கிள் பாடல்: பாடியவர் இவர் தான்!