Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு அந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள் ஆகிறது!

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (10:20 IST)
ரஜினி ரசிகர்களால் மறக்க முடியாது அந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள் ஆகிறது.
சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து, ‘சூப்பர் ஸ்டார்’ நிலைக்கு உயர்ந்திருக்கிறார் ரஜினி. அவரை, ‘கடவுள்’ என ஒரு கூட்டம் கைகூப்பித் தொழுகிறது. அவர் முகத்தை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என போயஸ் கார்டன் வீட்டின் வாசலில் காத்திருக்கும் நபர்கள் ஏராளம். ‘ரஜினி எப்போது  அரசியலுக்கு வருவார்?’ என எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட ரஜினி, உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்தச் சம்பவம் நடந்து நேற்றோடு 7 வருடங்கள்  ஆகின்றன. ரசிகர்களின் கண்ணீர்ப் பிரார்த்தனையாலும், கடவுளின் அருளாலும் அவர் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வந்துவிட்டார். இருந்தாலும், மே 28, 2011 என்பது ரஜினி ரசிகர்களின் வாழ்வில் ஒரு சோக நாளாகவே கருதப்படுகிறது. அந்த சோக நாளை, நேற்று வெளியான ‘காலா’ டிரெய்லர் மாற்றியிருக்கும் என்று நம்புவோம்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments