Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்டிகை நாள் வந்தா போதும்… தலைவா தலைவான்னு உயிர வாங்குறாங்க – ரஜினியின் பக்கத்து வீட்டு பெண் கோபம்!

vinoth
திங்கள், 15 ஜனவரி 2024 (12:15 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நூற்றுக் கணக்கான ரஜினி ரசிகர்கள் ரஜினி தங்கியிருக்கும் போயஸ் கார்டன் முன்புக் கூடினர். அப்போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பெண் ஒருவர் தங்கள் வீட்டு முன்னர் இப்படி கூட்டம் கூடி தங்களுக்கு தொல்லை தருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி அவர் “எதாவது பண்டிகை வந்துட்டா போதும். கூட்டம் கூட்டமா வந்து தலைவா தலைவான்னு கத்துறாங்க. உங்க வீட்ட கேட்ட தெறந்து உள்ள விடவேண்டியதுதான. நாங்களும்தான் வரி கட்டுறோம். ஆனா எங்களுக்கு எப்போதும் தொல்லைதான்” என காட்டமாக பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments