Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

32 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சூப்பர் ஸ்டார்கள்!

Advertiesment
ரஜினி
, புதன், 4 அக்டோபர் 2023 (07:28 IST)
ஜெயிலர் படத்தின் ரெக்கார்ட் பிரேக்கிங் வசூலுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த படம் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை என சொல்லப்பட்டது.

இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக ரஜினிகாந்த் திருவனந்தபுரம் கிளம்பி சென்றுள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் இணைந்து 80 களில் பல படங்களில் நடித்துள்ளனர். 1991 ஆம் ஆண்டு ஹம் படத்தில் கடைசியாக இணைந்து நடித்திருந்தார்கள். அதன் பிறகு 32 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த படத்துக்காக இரண்டு சூப்பர் ஸ்டார்களும் இணைந்துள்ளனர். இது இரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோகுல் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்!