Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகுபலி இயக்குனரின் அடுத்த இலக்கு மகாபாரதம்!!

பாகுபலி இயக்குனரின் அடுத்த இலக்கு மகாபாரதம்!!
, செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (17:47 IST)
உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொண்ட பின்னர் மகாபாரதம் படத்தை இயக்குவேன் என்று இயக்குனர் ராஜமௌலி கூறியுள்ளார்.


 
 
திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திரப் படமான ‘பாகுபலி’ படத்தை இயக்கியது இயக்குனர் ராஜமௌலி. இந்தப் படம் இவரைப் பற்றி இந்தியா முழுவதும் பேச வைத்தது. 
 
2015ல் வெளிவந்த முதல் பாகம் திரைப்பட ரசிகர்களை பிரமிக்க வைத்தது. அடுத்து இரண்டாம் பாகத்தை ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளார்கள். 
 
இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படம் குறித்து கூறியுள்ளார். ’’மகாபாரதம்‘’ கதையைப் படமாக எடுக்க வேண்டும் என்பது என் லட்சியக் கனவு. அதே சமயத்தில் உலகத் தரத்திலான தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொண்டு அந்தப் படத்தை இயக்க விரும்புகிறேன். அதற்கு இன்னும் 10 ஆண்டுகள் கூட ஆகலாம் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி...?