Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜமௌலியின் அடுத்த படத்திற்கு கதை ரெடி.. ஹீரோ யார் தெரியுமா?

ராஜமௌலியின் அடுத்த படத்திற்கு கதை ரெடி.. ஹீரோ யார் தெரியுமா?
, புதன், 14 ஜூன் 2017 (16:40 IST)
பாகுபலி எனும் பிரமாண்ட படத்தை இயக்கிய இயக்குனர் ராஜமௌலி தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.


 

 
கடந்த 5 வருடங்களில் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கினார் ராஜமௌலி. இதில் பாகுபலி2 இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை எட்டியுள்ளது. இப்படம் சுமார் ரூ.1700 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இப்படத்திற்கு பின் வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வெடுத்தார் ராஜமௌலி. தற்போது அவர் ரோமானியா நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கே, அவர் தனது அடுத்த படத்திற்கான கதையை உருவாக்கி வருவதாகவும், தற்போது அது இறுதி கட்டத்தை எட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

webdunia

 

 
முக்கியமாக இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார் எனவும், துளி கூட கிராபிக்ஸ் இல்லாமல் இப்படத்தை எடுக்க வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
 
ராஜமௌலியுடன் ஜூனியர் என்.டி.ஆர் இணைவது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பையில் இசை வெளியீட்டு விழா நடத்தும் தனுஷ்!!