Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் இயக்குனர் ஆகும் முயற்சியில் இயக்குனர் R சுந்தர்ராஜன்… ஹீரோ இவரா?

மீண்டும் இயக்குனர் ஆகும் முயற்சியில் இயக்குனர் R சுந்தர்ராஜன்… ஹீரோ இவரா?
, வியாழன், 23 ஜூன் 2022 (16:02 IST)
80 களின் ஹிட் இயக்குனர் R சுந்தர்ராஜன் கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர் ஆர்.சுந்தர்ராஜன். இவரது இயக்கத்தில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட படங்கள் இன்றும் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளாக உள்ளன. நாளடைவில் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்த சுந்தர்ராஜன் பல படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களையும், காமெடி கதாப்பாத்திரங்களையும் நடித்து முத்திரை பதித்துள்ளார். கடைசியாக அவர் சித்திரை நிலாச் சோறு என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இதையடுத்து தற்போது அவர் மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அவர் தனுஷை நடிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோவாகும் மற்றொரு நகைச்சுவை நடிகர்…. முனீஸ்காந்த் நடிப்பில் உருவாகும் புதிய படம்!