Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தொடங்கிய புஷ்பா படப்பிடிப்பு… காடுகளில் முகாமிட்ட படக்குழு!

மீண்டும் தொடங்கிய புஷ்பா படப்பிடிப்பு…  காடுகளில் முகாமிட்ட படக்குழு!
, புதன், 11 நவம்பர் 2020 (11:45 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று முதல் தொடங்கியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை  இயக்குனர் சுகுமார் இயக்கி வந்தார். இதற்கிடையில் கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இந்த படம் ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தாமதமானது.

இந்நிலையில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது புஷ்பா படக்குழு. மாரேடுமில்லி காடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 30 நாட்களுக்கு மேல் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் முக்கிய காட்சிகளை அங்கே படமாக்க உள்ளனர். இந்த படம் பிரம்மாண்டமாக 5 மொழிகளில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற விஷ்ணு விஷாலின் தந்தை!