Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகமாகும் முக்கியத்துவம்… புஷ்பா 2 வுக்காக மொத்தமாக தேதிகளைக் கொடுத்த பஹத் ஃபாசில்

அதிகமாகும் முக்கியத்துவம்… புஷ்பா 2 வுக்காக மொத்தமாக தேதிகளைக் கொடுத்த பஹத் ஃபாசில்
, செவ்வாய், 5 ஜூலை 2022 (15:03 IST)
புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாக திரை வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் முதல் பாகத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளில் மட்டுமே வந்த பஹத் ஃபாசில் கதாபாத்திரம், அடுத்த பாகத்தில் அதிக முக்கியத்துவம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மொத்தமாக 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் பஹத் ஃபாசில். இதுவரை இத்தனை நாட்களை அவர் எந்த படங்களுக்கும் கொடுத்ததில்லை என்று சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெந்து தணிந்தது காடு ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? பின்னணியில் பிரபல ஓடிடியா?