அதை மட்டும் செய்யாவிட்டால் விவேக் ஆன்மா ஏற்காது… தமிழிசை அறிவுரை!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:46 IST)
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உக்கிரதாண்டவம் ஆடிவரும் நிலையில் இந்தியாவில் புதிய உச்சமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களும் முகக்கவசம் அணிவதை வற்புறுத்தியும், இரவு நேர ஊரடங்கு மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு ஆகியவற்றை முன்னிறுத்தியும் பணிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது புதுச்சேரியில் பேசியுள்ள ஆளுநர் தமிழிசை ‘கொரோனாவை தடுக்க எளிய வழி முகக்கவசம் அணிவதுதான். அதே போல புதுச்சேரியில் அதிகமாக இருந்த தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை நடிகர் விவேக் மரணத்துக்குப் பின்னர் குறைந்துள்ளது. நடிகர் விவேக் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊசி போட்டு கொண்டார். ஆனால் அவரது மரணத்தை எண்ணி பயந்து ஊசி போடாமல் இருப்பதை அவரது ஆன்மா ஏற்காது. அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments