Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகையுடன் பப்பில் குத்தாட்டம் போட்ட நடிகர்

நடிகையுடன் பப்பில் குத்தாட்டம் போட்ட நடிகர்
, திங்கள், 8 மே 2017 (11:11 IST)
நடிகர் எஸ்.ஜே.சூர்யா, தன்னுடன் நடிக்கும் நடிகை ஒருவருடன் சென்னை பப் ஒன்றில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

 
 
எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் படம் ‘இறவாக்காலம்’. நயன்தாரா நடிப்பில் ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின்  சரவணன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஷிவதா நாயர் ஹீரோயினாக நடிக்கிறார். ‘மாயா’ படத்துக்கு இசையமைத்த  யோகன், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். 
 
இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ஜிஹானா வாசிஸ்த். இவர், எஸ்.ஜே.சூர்யாவுடன்  குத்தாட்டம் போடுவது போன்ற காட்சி, சமீபத்தில் படமாக்கப்பட்டது. சென்னையில் உள்ள மிகப்பெரிய பப் ஒன்றில் இந்தக்  காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். 
 
“எஸ்.ஜே.சூர்யா சார் ரொம்ப சிம்பிள். அவர் பெரிய இயக்குநர் என்று எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. அதைக்கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாகப் பழகினார். அவர் குடும்பத்தில் ஒருவராக என்னை நடத்துகிறார்” என்று புகழ்ந்து  தள்ளுகிறார் ஜிஹானா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி ரூ.1000 கோடியை மட்டும் வசூலிக்கவில்லை - ஆர்.ஜே.பாலாஜி அதிரடி