Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

vinoth

, திங்கள், 23 செப்டம்பர் 2024 (09:52 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் பிரியங்கா மோகன். அந்த படத்தின் வெற்றிக்கு அவரின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

சமீபத்தில் இவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல பாராட்டுகளைப் பெற்றது. தற்போது கவினுடன் ஒரு படம், தெலுங்கில் நானியோடு சரிபோதா சனிக்கிழமை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவியோடு பிரதர் படத்தில் நடித்துள்ள அவர், அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் தன்னுடைய காரில் செல்ல முற்படுகையில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்ஃபி கேட்டனர். அப்போது அவர்களிடம் “என் காருக்குள் வருகிறீர்களா என கோபமாக பேசினார்.” அதன் பின்னர் அவர் சில ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு கிளம்பினார். அவர் கோபமாகப் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரோல்களுக்கு ஆளாகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!