Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரியங்கா சோப்ராவின் நெஞ்சில் ராயல் பெங்கால் 'புலி'

பிரியங்கா சோப்ராவின் நெஞ்சில் ராயல் பெங்கால் 'புலி'
, ஞாயிறு, 7 மே 2017 (22:00 IST)
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சுமார் அரை கிலோ மிட்டர் நீள உடை ஒன்றை அணிந்து சமூகவலைத்தளங்களின் கிண்டலுக்கு ஆளானார். அந்த உடையை அவர் பின்னாடி பிடித்த வந்த இருவரும் ட்ரோலுக்கு தப்பவில்லை



 


இந்த நிலையில் தன் மீதான இமேஜை உடைக்கும் வகையில் நேற்று ஜிம்பாவேவில் நடந்த குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அவர் உடையணிந்து அனைவரின் பாராட்டுக்களை பெற்ரார். ஐநா குழந்தைகள் நிதியத்தின் சர்வதேச நல்லெண்ண தூதராக செயல்பட்டு வரும் பிரியங்கா சோப்ரா நேற்றைய நிகழ்ச்சியின்போது கருப்புநிற சேலையும், கை வேலைகளாலான புலிகள் இடம்பெற்ற ரவிக்கையும் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த புலி, இந்தியாவின் தேசிய விலங்கை குறிப்பிடுகிறதாம். அந்த புலி சரியாக பிரியங்காவின் நெஞ்சுக்கு நேராக அமைந்து கம்பீரமாக காணப்பட்டது.

இந்த உடையை வடிவமைத்த சப்யசாச்சி முகர்ஜி என்பவர் இந்த உடை குறித்து கூறியபோது, 'இந்த ஆடை இந்திய தேசிய விலங்கான 'புலி'யை கொண்டாடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 'சுந்தர்பன் சாரீஸ்' என்றழைக்கப்படும் இந்த சேலையில் கை வேலைகளால் புலி வரையப்பட்டுள்ளது. இதில் இருக்கும் புலி-ராயல் பெங்கால் டைகர் வகையைச் சார்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தளபதி 61' படப்பிடிப்பில் அட்லி மனைவிக்கு என்ன வேலை! தயாரிப்பாளர் புலம்பல்