Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியாமணி!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (15:00 IST)
நடிகை பிரியாமணி தனது கணவரான முஸ்தபா ராஜூவை விவாகரத்து செய்யப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

பருத்தி வீரன் படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக நிலை நிறுத்திக் கொண்ட பிரியாமணி, தேசிய விருது வரை சென்றார். ஆனால் அதன் பிறகு அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வராததால் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி எனக் கிடைத்த வேடங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் தொடர் கவனம் பெற்றது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் முஸ்தபா ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் முஸ்தபா ராஜுவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்ததாகவும், அவரின் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே பிரியாமணியை திருமணம் செய்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதை முஸ்தபா ராஜு மறுத்தார். இதனால் பிரியாமணிக்கும் முஸ்தபாவுக்கு கருத்து வேறுபாடு எழுந்து விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின.

இது சம்மந்தமாக மௌனம் காத்துவந்த பிரியாமணி இப்போது கணவரோடு மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments