Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

55 நாட்கள் நடித்தேன்… ஆனால் படத்தில் என் காட்சிகள் வரவேயில்லை.. புலம்பித் தள்ளிய பிரியா பவானி சங்கர்!

55 நாட்கள் நடித்தேன்… ஆனால் படத்தில் என் காட்சிகள் வரவேயில்லை.. புலம்பித் தள்ளிய பிரியா பவானி சங்கர்!

vinoth

, செவ்வாய், 15 அக்டோபர் 2024 (15:00 IST)
சின்னத்திரை நடிகைகளுக்கு ஒரு புதிய பாதைய வகுத்துக் கொடுத்தவர்தான் பிரியா பவானி சங்கர். தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் மேயாத மான் படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியா பவானி சங்கர்.

மேயாத மான் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்து முன்னணி நடிகையானார் பிரியா. இப்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதிலும் பிரியாவின் கதாபாத்திரம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் அவர் தனிப்பட்ட முறையிலும் ராசியில்லாத நடிகை என்று கேலிகளுக்கு ஆளானார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் ஒரு படத்தில் கஷ்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் நடித்தேன். ஆனால் டப்பிங் பேச சென்றபோது பார்த்தால் நான் நடித்தக் காட்சிகள் பலவற்றைக் காணவில்லை. இதுபற்றி கேட்டால் அது எல்லாம் மாண்டாஜில் வரும் என்றார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” எனப் பேசியுள்ளார். அவர் அது எந்த படம் என சொல்லாவிட்டாலும் விஷாலின் ரத்னம் படத்தைப் பற்றிதான் அவர் சொல்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துடன் ஐந்தாவது முறையாகக் கூட்டணி… சிறுத்தை சிவா கொடுத்த அப்டேட்!