Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஷூட்டிங்… பிரியா பவானி சங்கர் கொடுத்த அப்டேட்!

vinoth
செவ்வாய், 8 ஜூலை 2025 (08:14 IST)
டிமாண்டி காலணி என்ற படத்தின் மூலம் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. இந்நிலையில் தன்னுடைய ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக ‘டிமாண்டி காலனி 2’ படத்தை இயக்கினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் படத்துடன் ரிலீஸான இந்த படம் எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கை போடு போட்டு வசூலில் கலக்கியது. கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கடந்த ஆண்டின் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக அமைந்தது. இதனால் இந்த படத்தின் மூன்றாவது பாகத்தை உடனடியாகப் படக்குழு அறிவித்தது.

இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் தொடங்கியுள்ளது. படத்தின் நாயகி பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இதை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

போதைப் பொருள் வழக்கு… நடிகர்கள் ஸ்ரீகாந்த் & கிருஷ்ணாவின் ஜாமீன் மனு.. இன்று தீர்ப்பு!

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஷூட்டிங்… பிரியா பவானி சங்கர் கொடுத்த அப்டேட்!

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments