Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன்… பிரித்விராஜ் பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 27 ஜனவரி 2025 (07:11 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் அதற்கு முன்பாக மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் ஏற்கனவே பிருத்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவாவதாக இருந்த எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. எம்புரான் படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனரும் நடிகருமான பிரித்விராஜ் லைகா நிறுவனத்தில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் “உங்கள் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்துக்காக ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் பண்ணித் தர முடியுமா என்று கேட்டனர். என்னைப் போன்ற புதுமுக இயக்குனர்களுக்கு இது பெரிய வாய்ப்பு. ஆனால் பகுதி நேர இயக்குனரான என்னால் குறிப்பிட்ட தேதிக்குள் கதையை உருவாக்க முடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

திடீரனெ நிறுத்தப்பட்ட விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஷூட்டிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments