Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆடு ஜீவிதம் படத்துக்காக நான்கு மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்!

ஆடு ஜீவிதம் படத்துக்காக நான்கு மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்!

vinoth

, சனி, 16 மார்ச் 2024 (07:22 IST)
மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இந்நாவலை இயக்குனர் பிளஸ்சி திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்  வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே இந்த திரைப்படத்தின் கதை என்று தகவல்கள் வெளியாகின.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் கொரோனா காலத்தில் அரபு நாடுகளில் படமாக்கப்பட்டது. ஆனால் ஷூட்டிங் முடிந்தும் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் மார்ச் 28 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தமிழிலும் அதே தேதியில் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி கவனம் ஈர்த்துள்ளது.

இப்படத்துக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளிலும் பிரித்விராஜே தன்னுடைய கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியுள்ளார். இதன் மூலம் அந்த கதாபாத்திரத்தை மீண்டும் நான்கு முறை வாழ்ந்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக வசூல் செய்த மலையாளப் படமாக மஞ்ஞும்மள் பாய்ஸ் சாதனை.. விரைவில் 200 கோடி மைல்கல்!