Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலைவனத்தில் சிக்கினாலும் படப்பிடிப்பு நடத்துவோம்: ஜோர்டானில் சிக்கிய பிரித்திவிராஜ்!

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (09:56 IST)
ஜோர்டான் நாட்டிற்கு படப்பிடிப்புக்கு சென்ற நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் படக்குழுவினர் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

தமிழில் மொழி, ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் பிரித்திவிராஜ். இவரது பிளெஸ்ஸி என்ற படத்திற்கான படப்பிடிப்புக்காக படக்குழு ஜோர்டான் சென்றிருந்தது. ஜோர்டானில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைய தொடங்கியது. தற்போது ஜோர்டானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து விமான சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் ஜோர்டானிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.

ஜோர்டானில் பாலைவனப்பகுதியில் கூடாரம் அமைத்திருக்கும் படக்குழுவினர் அருகில் உள்ள இடங்களில் அவ்வபோது படப்பிடிப்புகளையும் நடத்தி வருகிறார்களாம். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள பிரித்திவிராஜ் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments