Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போட்டியாளர்களைக் கொஞ்சமாவது பேசவிடுங்கள்… விஜய் சேதுபதியைக் குற்றம் சாட்டிய பிரவீன் காந்தி!

Advertiesment
Biggboss Tamil Season 9

vinoth

, வெள்ளி, 17 அக்டோபர் 2025 (09:05 IST)
பிக்பாஸின் 9வது சீசன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் உரையாடல்களும், 18+ சமாச்சாரங்களும் விரசமாக அரங்கேறி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீசனில்  முதல் வார எலிமினேஷன் இருக்காது என்று நினைத்த நிலையில் முதல் ஆளாக வெளியேறியுள்ளார் ப்ரவீன் காந்தி.

அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது தொகுப்பாளர் விஜய் சேதுபதி அவரை நக்கலாகப் பேசி சீண்டி வெளியேற்றினார். பதிலுக்கு பிரவீன் காந்தியும் ஏதேதோ பேச முயன்றும் அவரால் விஜய் சேதுபதியைப் பேசி வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் வெளியில் வந்துள்ள பிரவீன் காந்தி விஜய் சேதுபதிப் போட்டியாளர்களைப் பேசவே விடுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது சம்மந்தமாக “விஜய் சேதுபதி சினிமாவில் எனக்கு ஜூனியர். ஆனால் பிக்பாஸில் அவர் எனக்கு சீனியர். அதனால் அவரை எதிர்த்து பேசமுடியவில்லை. ஆனால் விஜய் சேதுபதி அவர்களே,போட்டியாளர்களைப் பேச விடுங்கள். கமல் சார் அதை செய்வார். எப்போதுமே போட்டியாளர்களை மூக்கை உடையும் விதமாகவே பேசவேண்டும் என்ற முடிவோடு வராதீர்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரவீன் காந்தியின் இந்தக் கருத்து உண்மைதான் என்று அவருக்கு ஆதரவும் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்சார் செய்யப்பட்ட பாகுபலி –The Epic… ரன்னிங் டைம் விவரம்!