Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக போலீசாக நடிக்கும் பிரபுதேவா

Webdunia
சனி, 19 மே 2018 (15:26 IST)
தமிழில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் பிரபுதேவா முதல் முறையாக போலீசாக நடிக்க உள்ளார்.
 
பல வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் இயக்கிய தேவி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ஹிரோவாக ரீ-எண்ட்ரி  கொடுத்தார் பிரபுதேவா. அதன் பின்னர் அவரது  குலேபகாவாலி, மெர்குரி உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இதைத்தொடர்து லஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், சல்மான் கானை வைத்து ஹிந்தியில் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
 
இந்நிலையில், பிரபுதேவா ஏ.சி.முகில் இயக்கும் படத்தில் போலீசாக நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த ஜெபக் தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments