Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பி பட வசனம்… பத்திரிக்கையாளர்களோடு வாக்குவாதம் செய்த பிரபுசாலமன்!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (10:08 IST)
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள செம்பி திரைப்படம் நேற்று வெளியானது.

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்தன. இதையடுத்து அவர் இயக்கிய செம்பி திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் இறுதியில் இயேசு கிறிஸ்துவின் வசனம் ஒன்றை இடம்பெறச் செய்திருந்தனர். அதுகுறித்து நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அந்த வசனத்தை சுட்டிக் காட்டிய சில பத்திரிக்கையாளர்கள் “நீங்கள் மதப் பிரச்சாரம் செய்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த பிரபு சாலமன் “கிறித்துவம் ஒரு மதம் இல்லை. அதை அன்பாகதான் நான் பார்க்கிறேன். மதத்தைப் பரப்பவும் இயேசு கிறிஸ்து வரவில்லை” எனப் பதிலளித்தார். ஆனாலும் விடாமல் “இதே போன்ற போதனை பகவத் கீதையிலும் உள்ளது” என சொல்ல, அவர்களுக்கு மீண்டும் பதிலளிக்க வாக்குவாதமாக மாறியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments