சிவராத்திரியை முன்னிட்டு பிரபாஸின் கல்கி படக்குழு வெளியிடும் அப்டேட்!

vinoth
வெள்ளி, 8 மார்ச் 2024 (12:11 IST)
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கமல்ஹாசன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மதிப்பு இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது.

கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்தில் தனக்கான காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் முதல் பாகம் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு படத்தில் பிரபாஸ் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு அந்த அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments