Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்கி படத்தின் கதை மகாபாரதத்தில் தொடங்குகிறது… இயக்குனர் தகவல்!

கல்கி படத்தின் கதை மகாபாரதத்தில் தொடங்குகிறது… இயக்குனர் தகவல்!

vinoth

, திங்கள், 26 பிப்ரவரி 2024 (14:22 IST)
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கமல்ஹாசன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மதிப்பு இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது.

கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்தில் தனக்கான காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் நாக் அஸ்வின் “இந்த படத்தின் கதை மகாபாரதத்தில் தொடங்குகிறது. அதன் பின்னர் 2898 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இதனால்தான் படத்தின் தலைப்பு ‘கல்கி 2898 ஏடி’ என்று தலைப்பு வைத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாஹோ இயக்குனரின் அடுத்த படத்தில் நானி…!