Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.எஸ்.ராஜமவுலி படத்தில் மீண்டும் பிரபாஸ்: ’பாகுபலி 3’ உருவாகிறதா?

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (14:34 IST)
எஸ்.எஸ்.ராஜமவுலி படத்தில் மீண்டும் பிரபாஸ்
இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் ராஜமவுலி ஆகிய இருவரும் வெவ்வேறு படங்களில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர் 
 
ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. பாகுபலி, பாகுபலி 2’ படங்களுக்கு பின்னர் ’சாஹோ’ என்ற திரைப்படத்தில் நடித்த பிரபாஸ் தற்போதுதான் ’ஜான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகவுள்ளது.
 
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு மீண்டும் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் பாகுபலி மூன்றாம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படம் பாகுபலி 3’ படமா? அல்லது புதிய கதையம்சம் கொண்டதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அடுத்த ஆண்டு இருவரும் இணைவது மட்டும் உறுதி என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா கமல் - அன்பறிவ் படப்பிடிப்பு.. வாய்ப்பே என சொல்லும் படக்குழு..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments