Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் கதையில் நடிக்கும் அசோக் செல்வன்!

Advertiesment
போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் கதையில் நடிக்கும் அசோக் செல்வன்!

vinoth

, செவ்வாய், 28 ஜனவரி 2025 (10:30 IST)
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. திரையரங்குகள் மூலமாக மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியது.

இதையடுத்து கவனிக்கப்படும் இயக்குனராக உருவான விக்னேஷ் ராஜா அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் ஆனது. ஆனால் இன்னும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் விக்னேஷ் ராஜா எழுதியுள்ள கதை ஒன்றில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து தயாரித்தும் வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் மூனாறில் நடக்க உள்ளது. போர்த் தொழில் போலவே இதுவும் குற்றப் பின்னணியிலான கதை என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 47 படத்தை இயக்கும் பிரபல நடிகர்?… தீயாய்ப் பரவும் தகவல்!