Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவில் பொன்னியின் செல்வன் ரிலீஸில் சிக்கல்… வருத்தத்தில் தமிழ் மக்கள்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (08:38 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் உலகமெங்கும் ரிலீஸாக உள்ளது.

தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் கனடாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் வடிவம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடந்த காலங்களில் சில தமிழ் படங்கள் ரிலீஸான போது அங்கு திரையரங்குகளில் சில களேபரங்கள் நடந்துள்ளது என்பதால் தமிழ் தவிர மற்ற மொழிகளில் மட்டும் ரிலீஸ் ஆகிறதாம். இதனால் அங்கு பெரியளவில் அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments