Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்… தினமும் ஒரு கோடிக்கு மேல் வசூல்… சாதனைப் படைக்கும் பொன்னியின் செல்வன்!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (09:12 IST)
கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு சர்தார் மற்றும் பிர்ன்ஸ் என இரு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிய நிலையிலும், இப்போது மீண்டும் இந்த படத்துக்கு காட்சிகள் அதிகமாகியுள்ளன. இப்போது பொன்னியின் செல்வன் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிவருகிறது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தினமும் தமிழகத்தில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 225 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

அடுத்த கட்டுரையில்
Show comments