Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பொன்னியின் செல்வன்’ வசூல் ரூ.300 கோடி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (11:46 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரே நாளில் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் நான்கே நாளில் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்நிலையில் இந்த படம் வெளியாகி 7 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இந்த படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் 300 கோடி ரூபாய் வசூல் தாண்டி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் டிரேடிங் வட்டாரங்கள் இந்த படத்தின் வசூல் குறித்து கருத்து கூறிய போது ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்யும் என்றும் தமிழில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை வைத்திருக்கும் விக்ரம் படத்தின் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 124 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலா?

சென்னையில் நடக்கவிருந்த அனிருத் இசைக் கச்சேரி ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments