Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் போண்டா மணியிடம் ₹1 லட்சம் திருட்டு - ஒருவர் கைது

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (11:36 IST)
நடிகர் போண்டா மணியிடம் ஒரு லட்ச ரூபாய் திருடிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சமீபத்தில் காமெடி நடிகர் போண்டாமணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தனுஷ், விஜய்சேதுபதி உள்பட பல திரையுலக பிரபலங்கள் நிதி உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் போண்டா மணியின் ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.1 லட்சம் திருடியதாக ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் இருந்தபோது அவரிடம் நட்பாக பழகி பல்வேறு உதவிகளை ராஜேஷ் செய்ததாகவும் இதனை அடுத்து போண்டாமணியின் மனைவியிடம் மருந்து வாங்க வேண்டும் என்று அவருடைய ஏடிஎம் கார்டை வாங்கிய நிலையில் அதிலிருந்து பணத்தை ராஜேஷ் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து போண்டா மணி அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments