Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் மட்டும் 200 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன்!

தமிழகத்தில் மட்டும் 200 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன்!
, ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (16:14 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 12 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த வசூலில் கிட்டத்தட்ட பாதியளவு தமிழ்நாட்டில் இருந்துதான் வந்துள்ளது. இரண்டு வார முடிவில் 181 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ள நிலையில், மூன்றாம் வார முடிவில் 200 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“தோல்விக்காக என்னால் அழுது கொண்டு இருக்க முடியாது…” லைகர் இயக்குனர் மனம் திறப்பு