Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன்… ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது- அறிவித்த காஸ்ட்யூம் டிசைனர்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (08:07 IST)
மணிரத்னம் கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடத்தி வந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து நடிகர்களையும் வைத்து ஐதராபாத்தில் அரங்கு அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது அங்கு படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஏலா ஏகானி அறிவித்துள்ளார். இதையடுத்து ஜெய்ப்பூரில் சில காட்சிகளை படமாக்க உள்ளாராம் மணிரத்னம். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அட்லி இயக்கும் அடுத்த படம் வரலாற்றுக் கதையா?... வெளியான தகவல்!

இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது

"எமகாதகன்" ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது...

தமிழர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி: விஜய்க்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments